திருச்சிராப்பள்ளி, ஆக.17- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜங்சன் பகுதி செயலாளர் ரபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செ ல்வன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், கொரோனா நோய் தொற்று காலத்தில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளுக்கு கை கழுவுவ தற்கு, தண்ணீர் மற்றும் சானிடைசர் போன்ற எந்தவித ஏற்பாடும் இல்லை. முதியவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள் மாதந்தோ றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் போது அவர்க ளிடம் தனிமனித இடைவெளி இல்லை. அவர்களை ஒழுங்குப்ப டுத்த போதிய ஊழியர்கள் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக ளுக்கு நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.