தஞ்சாவூர், நவ.29- தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம் வேளாண்மைத் துறையில் நடப்பு வருடத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் (நெல்) கீழ் நெல் பயிர் அமைப்பு சார்ந்த பயிற்சி கீழக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு மதுக்கூர் வேளாண் மை துணை அலுவலர் கலைச்செல்வன் தலைமை வகித்து பேசுகையில், “தற் பொழுது சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அனைவரும் திருந்திய நெல் சாகுபடி முறையில் களைகளை கட்டுப்படுத்த கோனோவீடர் பயன் படுத்தி அதிக விளைச்சல் பெறலாம். மேலும், உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்டம் ஆகியன 50 சத மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள் ளது. அதனை விவசாயிகள் வாங்கி பயன் பெறுமாறு” கேட்டுக் கொண்டார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கார்த்திகேயன், நடவு வயலில் நோய் பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் மதிராஜன், நெல் பயிருக் கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை பற்றி தொழில்நுட்ப உரையாற்றி னார்.
வேளாண்மை உதவி அலுவலர் முருகேசு மற்றும் பாபி ஆகியோர், உயிர் உரங்கள் மற்றும் சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யும் முறையினை செய்து காண்பித்தார். கீழக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு யூரியா, ஜிப்சம், வேப்பம்புண்ணாக்கு கலந்து மேலுர மிடல் மற்றும் பயிர் எண்ணிக்கை பரா மரிப்பு மற்றும் சாணக்கரைசல் பயன் படுத்தி குலைநோய் கட்டுப்பாடு பற்றி யும் நேரடியாக வயலில் செய்து காண் பித்தார். நிகழ்ச்சியில் விவசாயிகளின் பார் வைக்கு கருத்துக் காட்சி அமைக்கப் பட்டிருந்தது. ஆர்.வி.எஸ் வேளாண் கல்லூரி மாணவிகள் சதுர மீட்டருக்கு பராமரிக்க வேண்டிய பயிர் எண்ணிக் கையின் முக்கியத்துவம் பற்றி எடுத்து ரைத்தனர். நிறைவாக துணை வேளாண் மை அலுவலர் கலைசெல்வன் நன்றி கூறினார். பயிற்சிஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் ஜெரால்டு மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் 30 விவசாயிகள் கலந்து கொண்டனர்.