tamilnadu

சேருகுடி கிராமத்தில்  குரங்குகள் தொல்லை அதிகரிப்பு

தா.பேட்டை, நவ.9- திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த சேருகுடி கிராமத்தில் வருவாய்த் துறை சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாமிற்கு முசிறி தாசில்தார் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வரு வாய் ஆய்வாளர் மணி வர வேற்றார். முகாமில் பட்டா நகல், பட்டா மாற்றம், முதி யோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பொது மக்களிடமிருந்து 80 மனுக்கள் பெறப்பட்டன.  இதில் 67 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 9 மனுக்கள் இதரதுறை அலுவலர்களின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 4 மனுக் கள் தள்ளுபடி செய்யப் பட்டது. முன்னதாக சேரு குடி கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ள தால் அவைகளை பிடித்து வனப் பகுதிக்குள் விடுவ தற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.