சீர்காழி: கொள்ளிடம் அருகே தில்லைமங்கலம் கிராமத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தில்லைமங்கலம் கிராமம் வெட்டி வேருக்கு பெயர் போன கிராமம் ஆகும். வெட்டிவேர் வளர்வதற்கு ஏற்ற மண் ஏதோ சில இடங்க ளில் மட்டும் அரிதாகக் காணப்படுகிறது. தண்ணீரை ஊற்றினால் உடனடியாக கரைந்து செல்லக் கூடிய வகையிலான மண்ணில் மட்டுமே வெட்டிவேர் சாகுபடி செய்யப்படுகிறது. அத்தகைய மென்மையான மண் அபூர்வமாக தில்லைமங்கலத்தில் மட்டுமே காணப்படுகிறது. இங்கு பயிரிடப்படும் வெட்டிவேர் பல வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப் பட்டது.
சுற்றுப் புறத்தை தூய்மையாக்கக் கூடிய வெட்டிவேர், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தா கவும், தண்ணீரை சுத்திகரிக்கவும் வெட்டிவேர் பயன்படுகிறது. பூக்களுக்கு மட்டுமே வாசனை உண்டு. ஆனால் வெட்டிவேருக்கு இயற்கையாக மணம் அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் தில்லைமங்கலத்தில் பயிரிடப்பட்ட வெட்டிவேர் சாகுபடி படிப்படியாக குறைந்தது. இன்று ஐந்து ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. அரசு எந்த நிதி உதவியோ மானியத்துடன் வங்கிக் கடனோ வெட்டிவேர் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. இதுவரை வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும் தோட்டக்கலைத் துறையில் கூட இந்த வெட்டிவேர் சேர்க்கப்படவில்லை. இதுவே தில்லைமங்கலத்தில் வெட்டிவேர் சாகுபடி நலிவுற காரணமாகும். இது குறித்து தில்லைமங்கலத்தில் வெட்டிவேர் சாகுபடி செய்து வரும் பன்னீர்செல் வம் கூறுகையில், அரசு நிதி உதவி வழங்கினால் வெட்டிவேர் சாகுபடியை தொடர்ந்து செய்ய முடியும். வெட்டிவேர் லாபம் தரக்கூடிய பயிராகும். இந்தப் பயிரை அரசு இதுவரை தோட்டக் கலைத் துறையில் கூட சேர்க்காதது வேதனையாக உள்ளது. அரசு நிதி உதவி செய்தால் தில்லைமங்கலத்தில் வெட்டிவேர் சாகுபடி மீண்டும் சிறப்பாக நடைபெறும். எனவே தில்லைமங்கலத்தில் நலிந்து வரும் வெட்டிவேர் சாகுபடியை அரசு ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வேண்டும். தோட்டக்கலைத் துறையில் வெட்டிவேரை சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.