tamilnadu

img

மின் ஊழியர் மத்திய அமைப்பு கருத்தரங்கு

திருவாரூர், நவ.29- தரமான மின்சாரம், அனைவ ருக்கும் மின்சாரம், நியாய விலை யில் மின்சாரம், தனியார்மய நடவடிக் கைகளை கைவிட வேண்டும். பொதுத் துறைகளை பாதுகாக்க வலியுறுத்தி யும் திருவாரூரில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு திட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க  மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மின் வாரிய செயல்பாடுகள், அரசின் மக்கள் விரோத, ஊழியர் விரோத போக்கு, முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கை முடிவு, பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம், இதன் மீது மக்களின் விழிப்புணர்வு மற்றும் பங்களிப்பு போன்றவை குறித்து உரையாற்றினார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, சிஐடியு மற்றும் மின் ஊழியர் சங்கத்தின் தலைவர்கள் எஸ்.ராஜாராமன், கே. ராஜேந்திரன், டி.முருகையன், எஸ்.அகஸ்டின், இரா.மாலதி, எஸ்.வைத்தியநாதன், எம்.கே.என்.அனிபா, வி.சுப்ரமணியன், ஆர்.ரமேஷ் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.