tamilnadu

புது அய்யன் வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 16- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளியன்று திருச்சி  ஆட்சியர் சிவராசுவை சந்தித்து, திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலை யில் குடமுருட்டி- திண்டுக்கல் வரை யிலான சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை யொட்டி காவிரிக் கரைகள் சேதப் படுத்தப்படுவதையும், அங்கே எடுக்கப்படும் மண் இலந்தை வடிகால் வாய்க்கால் மேல் கொட்டி அந்த வாய்க்காலை முழுமையாக மூட முயற்சி நடப்பதையும் சுட்டிக் காட்டப்பட்டது. மேலும் கடியாக்குறிச்சி அருகே தொடங்கி குடமுருட்டி ஆற்றில் கலக்கும் இந்த வடிகால் வாய்க்கா லானது வெள்ளக் காலங்களில் மிகவும் தேவையான ஒன்று. வாய்க் கால் செல்லும் வழியெங்கும் ஆக்கிரமித்தல் மற்றும் தூர்ந்தும் போயிருப்பதால் முறையாக சர்வே செய்து தூர்வாரி விவசாயிகள் பயன் பெறும் வகையில் சீர மைத்திட வேண்டுகோள் விடுக்கப் பட்டது. அதே போல பெட்டவாய்த்தலை யில் தொடங்கி எலமனூர் வரை  செல்லும் புது அய்யன் வாய்க்கால் மூலம் சுமார் 1600 ஏக்கர் பாசன பரப்பு கொண்டது. தலைப்பிலி ருந்து கடைமடை வரை வழியெங் கும் ஆக்கிரமிப்பால் 33 அடி அகலம் இருக்க வேண்டிய வாய்க்கால் 8 அடி அகலம் கூட இல்லை. ஏற்கனவே இந்த வாய்க்காலை மீட்க பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தியதன் விளைவாக சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற வட்டாட்சியர் தலை மையிலான அமைதிப் பேச்சு வார்த்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முழுமையாக தூர்வாரி கடை மடை வரை தண்ணீரை கொண்டு வந்து சேர்ப்பதாக வாக்களித்தி ருந்தனர்.  ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்காமல் இழுத்தடித்து வரு வதால் இந்தாண்டும் விவசாயம் கேள்விக்குறியாகி விடும். எனவே அதனை சீரமைக்க வலியுறுத்தப் பட்டது. இரண்டு கோரிக்கைக ளையும் கேட்டுக் கொண்ட ஆட்சியர் சிவராசு, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக ளுக்கு உரிய உத்தரவிட்டு ஆக்கிர மிப்புகளை அகற்றி வாய்க்காலை தூர்வாரிட ஆணை பிறப்பிப்பதாக உறுதியளித்துள்ளார். இதே கோரிக்கைகள் தொடர்பாக பொ துப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரை சந்தித்து மனுக்கள் அளிக்கப்பட்டது. தற்போது வரை வாய்க்கால் பராமரிப்பு பணிக ளுக்கென அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் நிதி ஒதுக்கீடு செய்தவுடன் புதுஅய்யன் வாய்க்காலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்தார். நிகழ்வில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநகர் மாவட்ட பாண்டி யன்,  மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வினோத்மணி, பிரகாச மூர்த்தி, விவசாய சங்க மாவட்ட து.தலைவர்- ஊராட்சி மன்ற தலை வர், திருப்பராய்த்துறை. செல்லை யா, விவசாய சங்க ஒன்றிய பொறுப்பாளர் காந்தி தி.துறை ஊராட்சி விவசாய சங்க செயலாளர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் உடனிருந்தனர் என அவர் மனுவில்  கூறியிருந்தார்.