நாகப்பட்டினம், ஜூலை 6- 2017-18 ஆண்டுக்கான விவசாயிகளுக்கு ரிய பயிர்க் காப்பீட்டுத் தொகை, பாதிப் பேருக்கு வழங்கி விட்டு, மீதி 845 விவசாயிகளுக்கு வழங்காமல் உள்ள கீழையூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி நிர்வாகத்தைக் கண்டி த்தும், உடனடியாக எஞ்சியுள்ள விவசாயி களுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரியும், கீழையூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலுக்கு வங்கியின் துணைத்தலைவர்(சி.பி.எம்.) ஏ.முருகையன் தலைமை வகித்தார். சி.பி.எம். கீழையூர் ஒன்றியச் செயலாளர் எம்.முருகையன், வி.தொ.ச. மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன் விளக்கவுரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அப்துல்அஜீஸ், ஏ.பாலசுப்பிரமணியன், கே.டி.எம்.சுஜாதா, என்.பன்னீர்செல்வம், எஸ்.அன்பழகன், கே.கிருஷ்ணன், கே.அன்பழகன், டி.வெங்கட்ராமன், பி.எஸ்.டி.ஜோதிபாசு உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் கூட்டுறவு வங்கியின் மேலாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதில் விரைவில் மீதியுள்ள விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.