தஞ்சாவூர், ஜூலை 1- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்க பேராவூரணி ஒன்றிய அமைப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை புனல்வாசலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.பஹாத் முகமது தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவராக அ.வின்சென்ட் ஜெயராஜ், செயலாளராக சி.கே.சுதாகர், பொருளாளராக தங்க.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் அ.ராவுத்தர், ஒன்றியச் செயலாளர் கே.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 5 பேருக்கு சக்கர நாற்காலியும், 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 2 பேருக்கு மோட்டார் பொருத்திய ஸ்கூட்டர் வாகனமும், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு உதவித் தொகையும், ஒரு நபருக்கு அடையாள அட்டையும் சங்க ஏற்பாட்டில் வாங்கி கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் 50 உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.