சீர்காழி, ஜூன் 19- கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சியில் கடந்த 2016-ல் கட்டு மானப் பணி துவங்கப்பட்ட 47 அர சின் கான்கிரீட் வீடுகள் இதுவரை கட்டி முடிக்கப்படாத நிலையில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சியைச் சேர்ந்த மணலகரம், அரசூர், கண்டிராஜ நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய அரசின் வீடு கள் கட்டும் திட்டத்தின் கீழ் 47 வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது. ஆனால் அரைகுறையாக கட்டும் பணி சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இத னால் பயனாளிகள் என்ன செய்வது என்றே தெரியாமல் உள்ளனர். மூப்பு அடிப்படையில் பயனாளிகள் பெயர் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படை யில் பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி துவங்கியது. ஆனால் பயனாளிகள் நினைத்தது போல் வீடு கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக பயனாளிகளிடமிருந்து ரூ 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் வசூ லிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பய னாளியும் வீடு கட்டும் ஆர்வத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களிடம் பணம் கொடுத்தும் வீடுகளை கட்டி முடிக்க முடியாத நிலையில் இருந்து வருகின்ற னர். இதில் பல லட்சம் பணத்தை அதி காரிகள் கையாடல் செய்துள்ளதாக பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். வீடுகளைக் கட்டிக் கொடுக்காமலேயே முழு பணத்தையும் அதிகாரிகள் எடுத்து மோசடி செய்து விட்டதாகவும் பயனாளிகள் சார்பில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இது குறித்து பயனாளிகள் கூறு கையில், திருச்சிற்றம்பலம் கிராமத்தில் வீடு கட்டி தருவதாக இங்கு வேலை பார்த்து வரும் பணி மேற்பார்வையா ளர் ஒரு வீட்டுக்கு ரூ 40 ஆயிரம் வீதம் கேட்டதால் கொடுத்தோம். வீடுகளை விரைவில் கட்டி தருவதாக வாக்குறுதி யும் அளித்தார். ஆனால் 2016 லிருந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் ஒன்றிய பணி மேற்பார்வை யாளர் கேட்ட ரூ 10 ஆயிரத்தை கொடுத் தோம். மூன்று வருடமாக பணி நடை பெறவில்லை. விடு கட்டும் பணி ஆரம்ப நிலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித் தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர். இது குறித்து அரசூர் முன் னாள் ஊராட்சி தலைவர் தேவேந்திரன் கூறுகையில், அரசூர் ஊராட்சியில் அர சின் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி கடந்த 2016ல் துவங்கப்பட்டது. ஆனால் வீடுகள் கட்டும் பணி ஆரம்ப நிலையி லும் பாதியிலும் கட்டப்பட்டு நிறுத்தப் பட்டுள்ளது 3 வருடங்கள் ஆகியும் வீடு களை கட்டும் பணி துவங்கிவில்லை. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலு வலக அதிகாரிகளிடம் சென்று பொது மக்கள் சார்பில் நாங்கள் சென்று ஆய்வு செய்து பார்த்ததில் அரசூரில் கட்டு மானப்பணி நிறுத்தப்பட்டுள்ள 47 வீடு களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணம் அதி காரிகளால் கையாடல் செய்யப்பட்டுள் ளதாகத் புகார் எழுந்தது. இது குறித்து சம்மந்தப்படட் அதிகாரிகளிடம் முறை யிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே இது குறித்து அதிகாரி கள் நேரில் விசாரணை செய்து 47 வீடு கள் கட்டும் பணியை உடனடியாக துவக்கி வீடுகளை கட்டி முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.