கும்பகோணம், நவ.10- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இளம் விஞ்ஞானிகளுக்கான தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாடு கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடை பெற்றது. ஆய்வு கருப்பொருளாக தூய்மை, பசுமை மற்றும் வளமான தேசத்திற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு களை அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் செய்முறை விளக்கம் அளித்தனர். மேலும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்பு களை மதிப்பீட்டாளர்கள் மத்தியில் மாண வர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். மாநாடு இரண்டு அமர்வுகளாக நடை பெற்றது. முதல் அமர்விற்கு அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டி.பாலமுருகன் தலைமை ஏற்றார். கும்பகோணம் மாவட்ட கல்வி அலு வலர் பாப்பம்மாள் தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலர் மஞ்சுளா பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபால், ஒரத்தநாடு மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அறிவொளி இயக்க மாவட்ட மாநில பொறுப்பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். இரண்டாவது அமர்வில் அறிவொளி இயக்க தஞ்சை மாவட்ட தலைவர் நாராயண சாமி தலைமை ஏற்றார். மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ராஜசேகர், மாநிலத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் பேராசிரியர் வி.சுகுமாரன் வரவேற்றார். தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, குழந்தை விஞ்ஞானிகளை பாராட்டி பரிசளித்தார். மாநாட்டில் அரசு பொறியியல் கல்லூரி தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கும்பகோணம் கோட்டாட்சி யர் வீராச்சாமி முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மாநாட்டு ஒருங்கிணைப்பா ளர் எஸ்.கார்த்திகேயன், அறிவொளி இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.