tamilnadu

img

குளம் தூர்வாரும் பணியில் 5 அடி உயர சிலை கண்டெடுப்பு

தரங்கம்பாடி, செப்.6- செம்பனார்கோவில் அருகே உள்ள கிடாரங்கொண்டான் ஊராட்சி பொன்செய் கிராமத்தில் குளம் தூர்வா ரும் போது 5 அடி உயர சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. நாகை மாவட்டம் செம்பனார்கோ வில் அருகே உள்ள பொன்செய் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகிலுள்ள ஆலங்குளம்   தூர்வா ரும் பணி நடைபெறுகிறது. இதில் வியாழக்கிழமை   குளத்தை தூர்வாரி மணல் எடுக்கும் போது 5 அடி உயர பெருமாள் கற்சிலை கண்டெடு க்கப்பட்டது. தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்)அருண் ஆகியோர் கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலையை பார்வையிட்டனர். மேலும் இது குறித்து தரங்கம்பாடி தாசில்தார் சித்ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து வருவாய்த் துறையினர், கற்சிலையை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துச் சென்றனர். மேலும் இந்த குளத்தில் வேறு சிலைகள் இருக்கலாம் என்று கருதி குளத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.