மன்னார்குடி, ஜுன் 26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் 45-ம் ஆண்டு அமைப்பு தினம் மற்றும் கிளைத் தலை வர் கவிஞர் சரசுவதி தாயுமானவனின் கவிதை நூல் வெளியீட்டு விழா மன் னார்குடியில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் இரா.இயேசு தாஸ் தலைமை வகித்தார். கிளை இணைச் செயலாளர் யு.எஸ்.பொன் முடி வரவேற்றார். அறிவியல் கவிஞர் ஏ. திருஞானம், கவிஞர் ப.மணிவண்ணன், கவிஞர் பாரதிபூமிநாதன், கவிஞர் ராதாதாமோதரன் ஆகியோர் கவிதை கள் வாசித்தனர். நகரக் கிளைத் தலைவர் கவிஞர் மன்னை சரசுவதி தாயுமானவன் எழுதி யுள்ள “புதிய கொன்றை வேந்தனும் குவளை மலர்களும்” நூலினை வெளி யிட்டு மாவட்டச் செயலாளர் ஆர்.பக வன்ராஜ் சிறப்புரையாற்றினார். நூல் முதல் பிரதிகளை இந்தியாவிற்கான மக்கள் இயக்கத்தின் வ.சேதுராமன், தமிழ்நாடு அறிவியல் இயக்க நகரத் தலைவர் மற்றும் நூலகர் தா. செல்வ குமார், தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற நகரச் செயலர் அ.முரளி, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என்.ராஜப்பா ஆகியோர் பெற்று கொண்டனர். சேரன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இளங்கோவன் கவிதை நூலை வாழ்த்தி உரையாற்றினார். நேப்பியர் பள்ளியின் இரு மாணவர் கள் நூலில் இடம்பெற்றுள்ள புதிய ஆத்திசூடி, புதிய கொன்றை வேந்தன் வரிகளை மனப்பாடமாக சொல்லி பாராட்டுகளைப் பெற்றனர். மாவட்டத் தலைவர் இரா.தாமோதரன் அமைப்பு தின சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் கே. பிச்சைக்கண்ணு நன்றி தெரிவித்தார். முன்னதாக, மாதந்தோறும் நடை பெறும் அறிவொளி வாசிப்பு இயக்கத் தின் 25-வது நிகழ்ச்சி நடைபெற்றது.