மன்னார்குடி, மார்ச் 14- தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் தஞ்சாவூர் கீரீன்லேண்ட் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு உலக சிறுநீர தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மீனாட்சி மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசா கருத்தரங்கில் கலந்த கொண்டு சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் வராமலிருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக பேசினார். கீரீன்லேண்ட் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.