மன்னார்குடி, செப்.30- சபரிமலை - வேளாங்கண்ணி - நாகூர் புனித தலங்களுக்கு சுற்றுலா செல்லும் பய ணிகளுக்கும் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு வருகை வரும் பிற மாநில மாண வர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கும் மகிழ்வான செய்தி கிடைத்துள்ளது என்று 15.3.2019 அன்று மத நல்லிணக்க ரயில் என்று தலைப்பிட்டு தீக்கதிரில் முதல் பக்க செய்தி வெளியாகியிருந்தது. இந்த ரயில்களின் அவசியத்தையும் கேரள - தமிழ் மக்களின் சமூக பொருளாதார தேவைகளோடு விவரித்து அந்த செய்தி வெளியாகியிருந்தது. அதாவது திருவாரூர் காரைக்குடி பிரிவு பயணிகள் போக்குவரத்து ரயில் தட வேலைகள் முழுமையாக முடிவ டைந்த பிறகு தற்போது எர்ணாகுளத்திலி ருந்து கோட்டயம், கொல்லம், தென்காசி, மதுரை, திருச்சி, தஞ்சை வழியாக வேளாங் கண்ணி வந்தடையும் விரைவு ரயில் திருப்பி விடப்பட்டு ராஜபாளையம், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப் பூண்டி, திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வந்தடையும் என்றும், அதே போல் வேளாங்கண்ணியிலிருந்து புறப்பட்டு தஞ்சை, திருச்சி, மதுரை, தென் காசி, புனலூர், கொல்லம், கோட்டயம் வழி யாக எர்ணாகுளத்தை சென்றடையவிருக்கும் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் விரைவு ரயில் சேவை திருவாரூர் - காரைக்குடி பிரிவு ரயில் தடத்தில் திருப்பிவிடப்படும் என்றும் ஆறு மாதங்களுக்கு முன்பே தீக்கதிரில் செய்தி வெளியாகியிருந்தது. இந்தச் செய்தி யை தமிழ்நாட்டில் தீக்கதிர் மட்டும் முதல் முதலாக வெளியிட்டிருந்தது. இப்போது இந்த ரயில் சேவைகள் வெகு விரைவில் துவங்கும் என உறுதிப்படுத்தப் பட்ட செய்திகள் வந்துள்ளன. வாரம் இரு முறையாக அதாவது சனிக்கிழமை, திங்கட் கிழமை காலை 10.45 மணிக்கு எர்ணாகுளத்தி லிருந்து புறப்பட்டு முறையே ஞாயிறு, செவ் வாயன்று காலை 4 மணிக்கு வேளாங்கண்ணி யை வந்தடையும். அதேபோல் வேளாங்கண்ணியிலிருந்து வாரம் இரு முறை அதாவது ஞாயிறு, செவ்வாய் பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கள், புதன்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் காரைக்குடி - திருவாரூர் பிரிவு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு இயக்கப்படும் முதல் விரைவு ரயில் என வும் கூறப்பட்டுள்ளது. இச்சேவைகள் சபரிமலை - நாகூர் - வேளாங்கண்ணி - திருத்தலங்களுக்கு செல்லும் அனைத்து மத வழிபாட்டா ளர்களுக்கும் ஆசியாவின் 2-வது பெரிய முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக் காடுகளுக்கு வருகை தரும் மாணவர்கள், ஆய்வாளர்களுக்கும் அருங்கொடையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தம் 742 கிமீ தூர இப்பயணத்தில் புனலூர் பகவதிபுரத்திற்கு இடையிலான 43 கிமீ முற்றிலும் மலைகளின் ஊடே செல்லும் ரயில் பயணமாகும். அழகு கொஞ்சும் மலைப் பிரதேசங்களின் வழியாக ஊர்ந்து செல்லும் இந்த ரயில் பயணங்கள் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதி லும் சந்தேகமில்லை. நாகூர், வேளாங்கண்ணி, முத்துப் பேட்டை, சபரிமலை தலங்களை இணைக்கும் இந்த ரயிலை மதநல்லிணக்க ரயில் என நாம் அழைக்கலாம். எப்போது துவங்கும் அந்த இனிய ரயில் பயணம் என்று எதிர்பார்த்தி ருந்தோருக்கு இது மகிழ்ச்சியான செய்தியே. இந்த சேவை 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. கடற்கரை நகரமான முத்துப்பேட்டை நகரம் திருவாரூர் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் மாற பிரகாசமாக வாய்ப்புகள் உருவாகி வருவதால் முத்துப் பேட்டை ரயில் நிலையத்தை தரம் உயர்த்த நிச்சயம் நிர்ப்பந்தங்கள் போராட்டங்கள் வலுப்பெறும் எனவும் நாம் நம்பலாம். - நீடா சுப்பையா