திருவாரூர், நவ.20- திருவாரூர் நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தர துப்புரவு ஊழியராக பணியாற்றி வரு பவர் மகேஸ்வரன்(36). இவர் தனது உடல் நிலை சரி இல் லாததால் விடுப்பு கேட்ட நிலையில் அவரை சம்பந் தப்பட்ட நகராட்சி அலுவலர் தரக்குறைவாக பேசி திட்டிய தால் மனமுடைந்து வீட்டிற் குச் சென்று மண்ணெண்ணெ யை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேற்கொண்ட துப்புரவு ஊழியர் மகேஸ்வரன் நகராட்சி மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், நகராட்சி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரால் அவமதிக்கப் பட்டதால் தற்கொலைக்கு முயன்றார். இதனையொட்டி அவர் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி அறிந்ததும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) தலைமையில் துப்புரவு ஊழியர்கள் நூற்றுக்கணக் கானோர் திரண்டு நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை யிட்டு உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இவர்க ளின் போராட்டத்திற்கு ஆதர வாக சங்கத்தின் மாநில தலைவர் ந.பாலசுப்ரமணி யன், சிஐடியு மாவட்ட தலை வர் இரா.மாலதி, செயலாளர் டி.முருகையன், சங்க செய லாளர் கே.முனியாண்டி, ஆலோசகர் எஸ்.ராமசாமி, கவுரவத்தலைவர் எம்.பால சுப்ரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். துப்புரவு தொ ழிலாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் போராட்டத்தி ற்கு தலைமையேற்றார். இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவ னத்திற்கு கொண்டு செல்லப் பட்டது. ஆட்சியரின் உத்தர வின் பேரில் வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் நகர காவல் துறையினர் சம்பவ இடத்தி ற்கு விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். ஆயினும் நகராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையை அலட்சியம் செய்து விட்டு இவர்களுடன் நான் பேச மாட்டேன் என்று வன்மமான அணுகுமுறை யைக் கையாண்ட நகராட்சி ஆணையரைக் கண்டித்தும், அவர் இந்த பிரச்சனையில் ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போ ராட்டக் குழுவினர் வலி யுறுத்தினர். மேலும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை நகராட்சி அலுவலகத்திலே யே உண்டு, உறங்கி போராட் டத்தை தொடர்வது என்ற ஆயத்த பணியிலும் ஈடுபட்ட னர். இதனால் வேறுவழி யின்றி தனது நிலையில் இருந்து இறங்கி வந்த ஆணையர் பேச்சுவார்த்தை க்கு சம்மதித்தார். அதன் பிறகு நகராட்சி ஆணையர் சங்கரன் முன்னிலையில் சிஐடியு தலைவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். மகேஸ்வரனை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை முயற்சிக்கு தள்ளிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவ சிகிச்சைக்கு உதவி டவும், ஊழியர்களின் பணிப் பதிவேட்டை முறையாக பரா மரிக்கவும், அவர்களின் விடுப்பு உள்ளிட்ட விப ரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவும், துப்புரவு பணி யாளர்களின் பணிச்சுமையை குறைப்பற்கு நகராட்சியின் மக்கள் தொகை அடிப்படை யில் கூடுதல் துப்புரவு பணியா ளர்களை நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளின் மீது நடவ டிக்கை எடுக்க ஆணையர் முன் வந்த நிலையில் போ ராட்டம் கைவிடப்பட்டது.