tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த கருக்கங்குடி கிராம மக்கள்

திருவாரூர், மே 28- திருவாரூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சி, கருக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த 40 குடும்பத்தினர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி வியாழக் கிழமையன்று மேற்கண்ட கிராமத்தில் சிபிஎம் கட்சி கிளைச் செயலாளர் டி.வீராச்சாமி தலை மையில் நடைபெற்றது. ஊராட்சி வார்டு உறுப்பி னர் பி.சாரங்கபாணி, எம்.தமயந்தி, எம்.துரை சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மறைந்த தோழர் ஏ.காளிமுத்து நினைவு கொடிக்கம்பத்தில் செங்கொடி ஏற்றினார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், சிபிஎம் மூத்த தலைவர் பி.மாத வன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜி.பவுன் ராஜ், வி.ராஜாங்கம், எஸ்.சேகர், கே.எஸ்.கோசி மணி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.சுந்தரய்யா, சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன், கிராம நிர்வாகி கள் ஏ.மணி, கே.முருகையன், வி.கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி யில் கிராம மக்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.  நெருக்கடியில் துணை நின்ற கட்சி கடந்த 18-ந் தேதியன்று இக்கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவரை வழி மறித்து  அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த சிலர் வண்டி சாவியை பறித்துக் கொண்டனர். இதனால் இதனை அறிந்த சம்பந்தப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் சென்று அவர்களிடத்தில் கேட்டுள்ளனர். இதனை இருவேறு பிரிவினருக்கான மோதலை உருவாக்க விரும்பி நியாயம் கேட்டவரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததுடன் வீட்டையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து திருவாரூர் ஊரக காவல் நிலையத்தில் பரஸ்பர புகார்கள் கொடுக்கப்பட்டன. இதில் சமூக ரீதியில் அவமா னப்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட சின்னப்பன் மகன் காளிதாஸ் (40), அவரது மகன்கள் கே.விக்னேஷ் (20), கே.தர்ஷன் (17) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து பொறையாறு சிறையில் அடைத்தனர்.

இதில் தர்ஷன் சிறார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்துள்ளார். மற்ற வர்களுக்கு பிணை கிடைக்கவில்லை.  அதே நேரத்தில் காளிதாஸ் மனைவி லதா அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதே தவிர எந்த மேல் நடவடிக்கையும் இல்லை. இதனால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை அவமானப்படுத்தி அச்சுறுத்தி தாக்கிய பக்கிரிசாமி மகன் கணேசன் (47) உட்பட 7 பேர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். திருவாரூர் ஊரக காவல்துறை, “சாதிக்கு ஒரு நீதி” என்ற அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் இரு சமுதாய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விரும்பத் தகாத செயல்களை அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக சம்பந்தப்பட்ட கருக்கங்குடி கிராமத்திற்கு சென்று சமூக பதற்றத்தை தணித்ததோடு பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு கட்சியின் ஆதரவையும் தெரி வித்தது.  இவர்கள் வசித்து வரும் ஊராட்சியின் தலை வர், பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி காரர். ஆனாலும் இவர்களுக்கு ஆதரவாக அவர் நிற்கவில்லை. ஆளும் அதிமுக உட்பட பல்வேறு கட்சியில் இப்பகுதி மக்கள் இருந்தாலும் யாரும் இவர்களுக்கு உதவ முன்வரவில்லை. எனவே நெருக்கடியான காலகட்டத்தில் தங்களுக்கு துணை நின்ற மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து கொள்வது என்று முடிவெடுத்த நிலையில் வியாழக்கிழமை யன்று இதற்கான இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தமூர்த்தி கூறுகையில், காவல்துறையின் பாரபட்சமான இந்த அணுகு முறையை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

காளிதாஸ் மனைவி லதா அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறை உடனடியாக சம்பந்தப் பட்டவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்வது குற்றவாளி களை சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க வைப்பதற்கு காவல்துறை துணை போகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே காவல்துறை நடுநிலையோடு செயல்பட்டு சாதிய வன்மத்தோடு நடந்து கொண்ட நபர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டு மென கேட்டுக் கொண்டார்.     (ந.நி)