மன்னார்குடி, நவ.6- ஈரோட்டில் இயங்கும் தன்னார்குடி தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடத்திய விழாவில், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் எஸ்.அன்பரசுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுதுறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் சிறந்த ஆசிரியர் விருதினை எஸ்.அன்பரசிற்கு வழங்கினார். பணியில் சேர்ந்த பிறகு கல்வித்தகுதியை மேம்படுத்தியது, தேர்ச்சி சதவீதம், கல்விசார் இணைச் செயல்பாடுகள், மாவட்ட, மாநில அறிவியல் கண்காட்சியில் மாணவர்களை பங்குபெறச் செய்தது, ஆய்வுக் கட்டுரைகள் சமர்பித்தது உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சிறந்த ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெற்றது. முதுகலை இயற்பியல் ஆசிரியர் எஸ்.அன்பரசுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டதற்கு மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டி.பி.ராமநாதன் மற்றும் தலைமையாசிரியர் டி.எல்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.