திருவாரூர், ஆக.18- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பேரிடர் கால த்தைப் பயன்படுத்தி மத்திய அரசு மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மின்சார சட்டத்திருத்த மசோதா 2020, சுற்றுச்சுழல் பாதிப்பு 2020 போன்ற கரு ப்புச் சட்டங்களை கொண்டு வர மோடி அரசு நடவ டிக்கை எடுத்து வருகிறது. இவைகளை கண்டித்து திருவாரூரில் செவ்வா ய்கிழமை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக சிஐடியு, தொமுச, பொறியாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செயலாளர் ராஜேந்திரன் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி
தென்னூரில் உள்ள மின்வாரிய மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஒலிமுழக்க போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவ ட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனைத்து தொ ழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் நான்குரோடு அருகே உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பொறியாளர் கழகம் சார்பில் வெங்கடேசன், மேகலா, பொறியாளர் சங்கம் சார்பில் பாண்டியன், சித்ரா, சிஐடியு சார்பில் எஸ்.அகஸ்டின், பன்னீர்செல்வம், ஐக்கிய சங்கம் சார்பில் சுகுமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.