tamilnadu

img

திருவாரூரில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

திருவாரூர், டிச.24-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவாரூர் ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சில் வேட்பாளர்களாக (வார்டு எண்-14) போட்டியிடும் ஜி.வசந்தா, உமாமகேஷ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் சி.வனிதா ஆகியோர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமையன்று சிவனாண்டார் கோவில், மேலதுரைக்குடி, கீழதுரைக்குடி, வடக்குத்தெரு, நெய்வேலி, ஈஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்த னர். மாவட்ட செய்ற்குழு உறுப்பினர் ஜி.பழனி வேல், ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜி.பவுன்ராஜ், எஸ்.சேகர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் சென்றனர். திமுக மாவட்ட செயலாளர் கே. கலைவாணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா ஆகியோர் வாக்குசேகரிப்பு பணியினை துவக்கி வைத்தார்.  கொரடாச்சேரி ஒன்றியம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஊராட்சிய ஒன்றிய கவுன்சிலர் (7 வார்டு) பொறுப்புக்கு கட்சி சார்பாக  கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியி டும் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.மருதைய னுக்கு வாக்களிக்க வேண்டி கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் கே.சீனிவாசன் தலைமை யில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், ஒன்றிய குழு உறுப்பினர் ஆர். மணியன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் கலந்து கொண்டு வாக்கு கேட்டனர்.