திருவாரூர், பிப்.26- திருவாரூர் தென்றல் நகரில் வசித்து வந்த தோழர் அறிவொளி க.ராஜகுமாரன் (72) அண்மையில் விபத்தில் சிக்கி காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி திருவாரூரில் ஓய்வுபெற்ற மின் ஊழியர் நல அமைப்புச் செயலாளர் ஜி.குமார் தலைமையில் நடை பெற்றது. திருவாரூர் தமிழ்ச்சங்க தலைவர் புலவர் இரா.சண்முகவடிவேல் படத்தினை திறந்து வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் எம்.எச்.ஸ்டீபன்நாதன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆர். சேகர்(எ)கலியபெருமாள், திருவாரூர் தொழி ற்சங்க கூட்டமைப்பு மூத்த தலைவர் எச்.அழகிரி, புலவர் சௌ.அம்புஜம் (அறிவொளி இயக்கம்), தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி இராம.கலைச்செல்வன், தொழிற்ச ங்க தலைவர் கூடூர் குணா, தமுஎகச தலைவர் சு.தியாகராஜன், வணிக குரல் ஆசி ரியர் செ.கருணா, ஆன்மீகம் ஆனந்தம் அமை ப்பின் கோ.காண்டீபன், என்.காளிமுத்து (வங்கி ஊழியர் சங்கம்), சண்முகசுந்தரம் (மக்கள் அதிகாரம்), யூ.சண்முகம் (தலைவர் தென்றல் நகர்), செய்தியாளர் எஸ்.நவமணி உட்பட பலர் புகழஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் அறிவொளி க.ராஜகுமா ரன் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக த்தில் அறிவொளி இயக்கம் துவங்கப்பட்ட காலத்தில் எழுத்தறிவிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட வர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.