tamilnadu

img

நிதி நிறுவனங்கள் கடன் வசூலில் ஈடுபடுவதை தடுக்கக் கோரிக்கை

குடவாசல், ஜூன் 15- குடவாசல் தாலுகாவில் உள்ள மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் கடந்த ஜூன் முதல் வாரத்தில் இருந்து தவணை தொகை வசூலில் ஈடுபடும் செயலில் இறங்கி உள்ள னர். இதனை தடை செய்ய கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக வட்டாட்சியரிடம் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர் புகார் மனு கொடுத்துள்ளார். இதையடுத்து திங்கள்கிழமை நடை பெற்ற சமாதானக் கூட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் வசூல் செய்வ தை நிறுத்த கோரி குடவாசல் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர் பேசினார். கொரோனா காலத்தில் அரசு உத்த ரவின்படி எந்தவிதமான நிதி நிறுவனங்க ளும் ஆகஸ்ட் மாதம் வரை கடன் தொகையை வசூலில் ஈடுபட கூடாது என உத்தரவு உள்ளது. இதனை மீறி மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடந்த ஜூன் முதல் வாரத்திலிருந்து தவணைத் தொகை யை வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏழை எளிய விவசாய கூலிகள் முதல் அனைத்துத் தரப்பட்ட மக்களும் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். குடும்ப பிரச்சனை மேலோங்கி வருகிறது. கொரோ னா பாதிப்பு இருந்து இன்னும் மீளாத நிலை யில் கிடைக்கும் வேலையை செய்து வயிற்றுப் பசியைப் போக்கும் நிலையில் உள்ள மக்களி டம் சென்று தவணை தொகையை வசூல் செய்வது ஏற்புடையது அல்ல. ஆகவே அரசு உத்தரவுப்படி ஆகஸ்ட் மாதம் கடந்து வசூல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றார்.   பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.லட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் எப்.கெரக்கோரியா, தீக்கதிர் செய்தியாளர் எஸ். நீதிராஜன் மற்றும் நகர கிளை செயலாளர் சோமு,ராஜா ஆகியோர் கலந்து கொண்ட னர். அரசு தரப்பில் குடவாசல் வட்டாட்சியர் பரஞ்சோதி, மண்டல வட்டாட்சியர் தேவேந்தி ரன், குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் மற்றும் நிதி நிறுவன மேலாளர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராததை அடுத்து வட்டாட்சியர் பரஞ்சோதி வரும் புதன்கிழமை மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறி கூட்டத்தை ஒத்திவைத்தார்.