திருவண்ணாமலை, நவ. 14- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, குடியிருப்பு பகுதியில் செயல்படும் மதுக்கடையை அகற்றக் கோரி, கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கம் அடுத்த பனைஓலை பாடி கிரா மத்தில், இரண்டு இடங்களில் டாஸ்மாக் மது பானக் கடை இயங்கி வந்தது. அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடிபோதை யில் வருபவர்கள் அப்பகுதி மக்களிடம் அடிக்கடி தகராறு செய்வதாகவும், அதனால் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர். அவரின் உத்தரவின்பேரில், இரண்டு டாஸ்மாக் கடை களும் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந் நிலையில், திங்களன்று பனைஓலைபாடி கிரா மத்தில் ஏற்கனவே டாஸ்மாக் மது கடை செயல்பட்ட இடத்தில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள், செவ்வாயன்று (நவ.5) கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் டி.கே. வெங்கடேசன், நிர்வாகி கள் சின்னதுரை, ராஜ்குமார், மார்க்சிஸ்ட் கட்சி யின் செங்கம் செயலாளர் ஏ. லட்சுமணன், முபாரக் ஆகியோர் தலைமையில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த செங்கம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்தினார். சம்மந்தப்பட்ட அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி, கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக, எழுத்துப் பூர்வமாக உறுதியளித்ததால் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னர், மீண்டும் புதன்கிழமை (நவ.13) இரண்டு டாஸ்மாக் கடைகளும் திறக் கப்பட்டன. கடையை திறக்க எதிர்ப்பு தெரி வித்த கிராம மக்களை, டாஸ்மாக் கடை கட்டிட உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர். இத னால், ஆவேசமடைந்த கிராம பெண்கள், வியாழன் அன்று (நவ.14) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர்.