திருவண்ணாமலை, டிச. 3- திருவண்ணாமலை நகரில் தீபவிழா டிச.1 முதல் 10 ஆம் தேதிவரை 10 நாட்கள் நடைபெற வுள்ளது. இத்திருவிழாவில் 10 ஆவது நாளான டிச. 10 அன்று மலை உச்சியின் மீது மகாதீபம் ஏற்றப்படவுள்ளது. இத்திருவிழா விற்கு சுமார் 20 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மக்க ளின் பாதுகாப்பு கருதி, திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுடன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப் பாளார் சிபி சக்கரவர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி ஆகி யோர் தலைமையில், கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருவிழாவின் போது, விடுதியில் தங்க வருபவர்களிடம் பெற வேண்டிய ஆவணங்கள் குறித்தும், அவர்கள் கொண்டுவரும் உடமைகளை தவறாமல் சோதனையிட வேண்டும் என்பது குறித்தும், விடுதியில் சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டது. மேலும், விடுதியில் தங்கும் நபர்களின் வாகனங்களை போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் நிறுத்துவது குறித்தும், காவல் துறையினருக்கு தகுந்த ஒத்து ழைப்பு அளிப்பது குறித்தும் திருவண்ணா மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார்.