தாராபுரம், ஜூன் 18- தாராபுரத்தில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தாரா புரம் நகர்நல அதிகாரி லட்சுமி நாரா யணன் தலைமையில், சுகாதார ஆய்வா ளர்கள் ராஜ்மோகன், அருண் பிரபாகரன், தர்மராஜ் ஆகியோர் என்என் பேட்டை வீதி, பெரியகடைவீதி, வசந்தா ரோடு பகுதி களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை டாஸ்மாக் பார் உள்பட மளிகைக்கடை, பேக்கரி, மொத்த வியா பார கடைகளில் நடைபெற்றது. இதில் சரவணன் என்பவரது மொத்த மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட ஒன்றரை டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ..25 ஆயிரம் அப ராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.