tamilnadu

விவசாயிகள் இன்று போராட்டம் - இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு

திருப்பூர், செப். 24- இந்திய விவசாயத்தை சீரழிக்கும் மத் திய அரசின் சட்டத்திற்கு எதிராக இன்று (வெள்ளியன்று) திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தெரிவித் துள்ளன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்திய நாட்டின் விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்க்கையையும் சீர ழிக்கும் வகையில் மத்திய மோடி அரசு, அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்தம், வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம், விவசாயிகளின் விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவை கள் மீதான ஒப்பந்த சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் அண் மையில் நிறைவேற்றியுள்ளது.

இச்சட்டங்களை திரும்பப்பெற வலியு றுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறை கூவலுக்கு ஏற்ப திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊத்துக்குளி, அவிநாசி, தாராபுரம், உடு மலை ஆகிய இடங்களில் வெள்ளியன்று சாலை மறியல் போராட்டம் நடைபெறு கின்றன.  இந்த மையங்களில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டுகி றோம். மேலும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைபெறும் இப்போ ராட்டத்தை ஆதரித்து கட்சி அணிகளும், அனைத்து விவசாய இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், வாலிபர், மாதர், மாண வர் உள்ளிட்ட அமைப்புகள் திரளாக பங் கேற்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.