திருப்பூர், ஜூன் 22- பல்லடம் வட்டம், நாரணாபுரத்தில் தந்தையின் இறப்புச் சான்றிதழ் கோரிய வரை ஒரு மாத காலமாக அலைக்கழித்ததால் அவர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டார். இதையடுத்து அவரிடம் மன்னிப்புக் கோரிய கிராம நிர்வாக அலு வலர் இறப்புச் சான்றிதழ் வழங்க நடவ டிக்கை எடுத்தார். நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் சுந்த ரேசன். இவரது தந்தை பாலசுப்பிர மணியம் கடந்த ஒரு மாதத்துக்கு முன் பாக இறந்துவிட்டார். எனவே பாலசுப்பிர மணியம் இறப்புச் சான்றிதழ் கோரி சுந்த ரேசன் நாரணாபுரம் கிராம நிர்வாக அலு வலர் அலுவலகத்தில் மனுச் செய்தார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் முத்து லட்சுமி மேற்படி சான்றிதழை வழங்காமல் ஒரு மாதமாக அலைக்கழித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் சுந்தரேசன் தனது உற வினருடன் வியாழனன்று கிராம நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். கிராம நிர் வாக அலுவலர் அங்கு வரக்கூடிய பொது மக்களிடம் மரியாதைக் குறைவாக பேசுவ துடன், சான்றிதழ் பணிகளைச் செய்து தராமல் இழுத்தடிப்பதாகவும், இடைத் தரகர்கள் மூலம் மட்டுமே சான்றிதழ் வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டிய சுந்த ரேசன் தனது தந்தையின் இறப்புச் சான்று கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாகக் கூறி அமர்ந்திருந் தார். இதையடுத்து கிராம நிர்வாக அலு வலர் முத்துலட்சுமி அவரிடம் மன்னிப்புக் கோரி போராட்டத்தை முடித்துக் கொள் ளும்படியும், உடனடியாக சான்றிதழ் வழங்குவதாகவும் கூறினார். சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் சுந்தரேசன் தனது போராட் டத்தை முடித்துக் கொண்டார்.