அரசு பேருந்து சேவைக்கு அணுகலாம்
தூத்துக்குடி, ஆக.12- பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல் வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்து சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்ட ணத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் tnexpress16@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் 94450-14402, 94450-14416, 94450-14424 மற்றும் 94450-14463 எண்கள் மூலமாக தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அறிவுறுத்தல்
திருநெல்வேலி,ஆக.12- அரசு விதிமுறைபடி தென்காசி மாவட்டத்தில் சுதந்திர தின விழா தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெறுகிறது. விழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவி களுக்கு அனுமதி கிடையாது என ஆட்சி யர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித் துள்ளார்.
சட்டவிரோத செயல்கள் தெரிவிக்க புகார் எண்
தூத்துக்குடி, ஆக.12- தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள், காவல்துறையின் அவசர உதவிக்கு எந்த நேரத்திலும் மாவட்ட காவல் கட்டுப் பாட்டு அறை அவசர உதவி எண் 100 அல்லது ஹலோ போலீஸ் 95141- 44100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு நேரடி தகவல், குறுந்தகவல் மற்றும் வாட்ஸ் ஆப் தகவல் அளிக்கலாம். மேலும் சட்டவிரோத செயல்கள் நடப்பது பொதுமக்களுக்கு தெரியவந்தால் இந்த எண்களுக்கு தகவல் கொடுக்கலாம். தகவல் தருபவர்களுடைய விபரம் ரக சியமாக வைக்கப்படும் என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வெள்ளையத்தேவன் சிலை அமைக்க நிதி ஒதுக்கீடு : ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி, ஆக.12- தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட் டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளை யத்தேவன் மணிமண்டபத்தில் ரூ.39.75 லட்சம் மதிப்பில் வெள்ளையத்தேவன் குதிரை மீது அமர்ந்துள்ளவாறு சிலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : செய்தி மற்றும் விளம்ப ரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மணி மண்டபத்தில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் அவர்களின் பிறந்த நாளின்போது பொது மக்கள் மற்றும் வாரிசுதாரர்கள், வழி தோன்றல்கள் ஆகியோரின் கோரிக்கை யினை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இங்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் வெள்ளை யத்தேவன் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பெரிய மீசையுடன் உருவிய வாளுடன் குதிரை மீது அமர்ந்து வரும்படியான சிலை ரூ.39.75 லட்சம் மதிப்பில் அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார். பொதுப்பணித்துறை மூலம் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விரை வில் சிலை செய்யப்பட்டு நிறுவப்பட உள் ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந் தூரி தெரிவித்துள்ளார்.
1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: 2பேர் கைது
தூத்துக்குடி, ஆக.12- தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்துள்ள னர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்சிங் தலைமை யிலான போலீசார் திங்களன்றுரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாமு வேல் புரத்தில் ஒரு பள்ளி அருகே கஞ்சா வுடன் நின்று கொண்டிருந்த நெல்லை கேடிசி நகர் ஆரோக்கியநாத புரத்தைச் சேர்நத காசி மகன் ஆதிநாராயணன் (63), தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த பாலையா மகன் கணேசன் (56) ஆகிய 2பேரையும் கைது செய்த னர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கிறார்.