tamilnadu

துணை முதல்வர் மாவட்டத்தில் தொடரும் பிரச்சனைகள்: கண்டுகொள்ளாத ஆட்சியர்

தேனி, மே 19- தேனி மாவட்ட அரசு போக்குவரத்து கழ கங்களில் மொத்தம் ஏழு பணிமனைகள் உள்ளன. பராமரிப்பு மற்றும் அலுவலக பணியாளர்கள் 50 சதவீதம் பேர் அரசு உத்தரவுப்படி பணிக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர் ஒவ்வொரு கிளைகளிலும் சுமார் 30 தொழிலாளர்கள் வரை பணிக்கு வந்து செல்கின்றனர். ஆனால் பணியா ளர்களுக்கு உடல் பரிசோதனை மேற் கொள்ளவில்லை. தொழிலாளர்கள் வந்து செல்ல பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்க வில்லை. கிருமி நாசினி, கையுறை, முகக் கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை.  தொழிற்சாலைகள் சட்டப்படி கேண்டீன், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் போக்கு வரத்து கழக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்காததால் அவர்கள் கலக்க மடைந்ததுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட்டு போக்குவரத்து கழக பணிமனை களை ஆய்வு செய்யவேண்டும் என போக்கு வரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.