தஞ்சாவூர், ஜூலை 24 - தஞ்சை மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.கும ரப்பா பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டாணிக்கோட்டை யில் உள்ள பேராவூரணி வட்டார ஒருங்கிணைந்த வேளா ண்மை விரிவாக்க மைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பேராவூரணி குமரப்பா பள்ளியைச் சேர்ந்த 2-ம் வகுப்பி லிருந்து 6-ம் வகுப்பு வரையிலான 50 மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறி மா, பலா, வேம்பு, புங்கை, தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை தலா 1 வாங்கி வந்து அவர்களது கைகளால் வேளாண்மை விரி வாக்க மையத்தில் நட்டு வைத்தனர். அனைத்து கன்றுகளுக்கும் கூண்டு அமைத்து ஒவ்வொரு மரக்கன்றிலும் நட்ட மாணவரின் பெயர் எழுதி பராமரிப்பதெனவும், 15 தினங்களுக்கு ஒரு முறை பள்ளி யிலிருந்து மாணவர்கள் விரிவாக்க மையம் வந்து மரக்கன்று களை பார்த்து செல்வதெனவும் மாணவர்கள் உறுதி பூண்டுள்ளனர். இதற்கான விழாவில் தமிழ்நாடு மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகளின் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பேராவூ ரணி வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.மாலதி, வேளாண்மை அலுவலர் ராணி, குமரப்பா பள்ளி அறங்காவ லர்கள், பள்ளி முதல்வர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.