கும்பகோணம், செப்.11- கும்பகோணம் அடுத்துள்ள தாரா சுரம் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை மிக மோசமாக இருப்பதால் சீர மைக்க வேண்டுமென கும்பகோணம் சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் உலக பிரசித்தி பெற்ற யுனஸ்கோ நிறுவனத்தால் தொல்லியல் துறை ஆய்விலிருந்து வரும் ஐராவதீஸ்வரர் ஆலயம் உள்ளது. தாராசுரம் காய்கறி மார்க்கெட் மாவட்டத்தில் உள்ள பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றாகும் இந்த மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதி களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன இந்நிலையில் தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து தாரா சுரம் பேரூராட்சி அலுவலகம் வரை உள்ள தார் சாலை மிகவும் மோசமான நிலையில் போக்குவரத்துக்கு பயன் படுத்த முடியாமல் உள்ளது. தாராசுரம் குருநாதன் பிள்ளை காலனி, வெள்ளாளத் தெரு கம்மாள தெரு, கவரை தெரு கலைஞர் காலனி, சக்தி நகர் மற்றும் பல்வேறு கிராமங்க ளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள் இந்தப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்க ளும் கல்லூரி மாணவ மாணவியர்கள் அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர் இந்த சாலை வழியாகத் தான் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. மயிலாடுதுறை ஆடுதுறை திரு விடைமருதூர் திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்களும் காய்கறி வியாபாரிகளும் பழு தடைந்த சாலையால் அவதிப்பட்டு வரு கிறார்கள் சாலையில் கற்கள் சிதறிக் கிடப்பதாலும் குண்டும் குழியுமாக இருப்பதாலும் மோட்டார் சைக்கிள் பழுதாகி விடுகின்றன மழை பெய்யும் போது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது சாலையில் இருபுறமும் புதர்கள் மண்டிக் கிடப்ப தாலும் மின் விளக்குகளும் இல்லாமல் இருட்டாகவே உள்ளது இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்களும் வியாபாரி களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பொதுமக்களுக்காக என்றும் சமூக அக்கறையுடன் செயல் பட்டு வரும் கும்பகோணம் சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு தாராசுரம் சாலையை சரி செய்து மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.