tamilnadu

img

பணிப் பாதுகாப்பு கோரி பேராசிரியர்கள் போராட்டம்

தஞ்சாவூர், பிப்.27- தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறி வியல் கல்லூரியில், 8 ஆண்டுகளு க்கும் மேலாக தற்காலிகமாக பணி யாற்றி வந்த பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சுமார் 113  பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தில் பணியாற்றி வந்த சிலர் இக்கல்லூரியில் நியமிக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்கள், அவர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் புதன்கிழமை முதல் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இரண்டாவது நாளாக வியா ழக்கிழமை அன்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர்கள் தங்களை நிரந்தர பேராசிரியர்களாக அரசு அறி விக்க வேண்டும் என்றும், பணி பாது காப்பு வழங்கிட வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்தனர். பேராசிரியர்க ளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலா ளர் மு.காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் என். சுரேஷ்குமார், ஒரத்தநாடு வக்கீல்கள் சங்கம் ஆகியோர் ஆதரவு தெரி வித்து போராடிய ஆசிரியர்களோடு அமர்ந்தனர்.  மாணவிகளையும், பேராசிரியர்க ளையும் காவல்துறை கைது செய்ய விடக்கூடாது என்பதற்காக அரசியல் கட்சிகள் பாதுகாப்பாக நின்றிருந்த னர். இந்த தகவல் அறிந்ததும் ஒரத்த நாடு திமுக எம்எல்ஏ பி.ராமச்சந்திரன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகி யோர் நேரில் வந்து ஆதரவு தெரி வித்தனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பி னர் எம்.பி ஆர்.வைத்திலிங்கமும் நேரடியாக வந்து பேராசிரியர்களை சந்தித்தார்.  பொறுப்பற்ற முறையில் இருக்கும் கல்லூரி முதல்வரை இட மாறுதல் செய்ய வேண்டும் என்றும் பேராசிரியர்களும் மாணவிகளும் வேண்டுகோள் விடுத்தனர். போராட் டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களை சந்திக்காமலேயே கல்லூரிக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்க தாகும்.