மேட்டுப் பாளையம் அருந்ததிய மக்கள் 17 பேர் பலி
சென்னை, டிச.12- மேட்டுப் பாளையத்தில் சுவர் இடிந்ததில் 17 பேர் உயிரிழந்த கொடூரம் குறித்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்த வழக்கு வியாழனன்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வன்கொடுமை
தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் தனது மனுவில், உயிரி ழந்த 17 பேரும் பட்டியல் சாதி அருந்ததியர் சமூ கத்தை சார்ந்தவர்கள், சாதி இந்துவான ஜவுளிக் கடை அதிபர் சிவசுப்பிரமணியன் எழுப்பியிருக்கிற சுவர் 20 அடி உயரம், 80 அடி நீளம், 2 அடி அகலம் அளவிலானதாக தலித் மக்களை பார்வையில் இருந்து விலக்கி வைப்பதாக உள்ளது. இந்த சுவர் அபாயகரமான முறையில் சேதமடைந்த தாக உள்ளது என வட்டாட்சியர் மற்றும் நகராட்சி யிடம் செய்யப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை யின்மை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குறிப் பிட்டுள்ளபடி மாநில மாவட்ட மட்ட விழிப்பு மற்றும் மேற்பார்வைக் குழு முறையாக கூட்டப்படாமை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். சாதிய மனோபாவத்தோடு நிலைநிறுத்தப்பட்ட சுவர் என்பதால் குற்றவாளி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், பட்டியல் சாதி மக்களின் உயிரைக் காப்பாற்றத் தவறிய அதிகாரிகள் மீது விசா ரணை நடத்தி நடவடிக்கை, ரூ 10 லட்சம் அரசு இழப்பீடு போதாது என்பதால் அது அதிகரிக்கப் பட வேண்டும், வன்கொடுமைகளைத் தடுப்ப தற்கான மாநில மாவட்ட மட்ட விழிப்பு மற்றும் மேற்பார்வைக் குழுக்கள் கூட்டப்பட வேண்டும், மாநி லம் முழுமையும் தலித் மக்கள் வாழிடங்களில் எழுப்பப்பட்டுள்ள இத்தகைய சுவர்கள் அகற்றப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் அந்த மனு வில் இடம் பெற்றிருந்தன. தமிழக அரசு, ஆதி திராவிடர் நலத் துறை செய லாளர், கோவை மாவட்ட ஆட்சியர் எதிர் மனு தாரர்களாக மனுவில் இணைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணை
சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர்கள் சத்திய நாராயணா, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அருந்ததிய மக்கள் வாழிடத்திற்கான பட்டா ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வழக்கறி ஞர் கே.சி.கார்ல்மார்க்ஸ் வாதாடினார். அடுத்த விசாரணை ஜனவரி 24 அன்று நடை பெறும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.