tamilnadu

பரிசோதனை உபகரணம் போதிய அளவு இல்லாததால் தஞ்சாவூர் பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம்

தஞ்சாவூர், மே 13- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அரசு மருத்துவமனையில், கொரோனா சளிப்பரிசோதனை கருவிகள், போதிய அளவு இல்லாத தால், பொதுமக்கள், கர்ப்பிணிகள் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய அளவு கருவி களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  பேராவூரணி பகுதியில், இது வரை கொரோனா தொற்று காரண மாக 3 பேர் தஞ்சையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். அவர்களு டன் தொடர்புடைய மற்றும் உற வினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோ ருக்கு, கொரோனா உள்ளதா என கண்டறிய, சளிப்பரிசோதனை செய்ய, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  

மேலும், பேராவூரணி வட்டா ரத்திற்குள், சென்னை மற்றும் இதர மாவட்டங்கள், வெளி மாநிலங்க ளில் இருந்து வருவோரை, சோத னைச்சாவடி மூலம் கண்டறி யப்பட்டு, அவர்களுக்கு சளிப்பரி சோதனை செய்ய மாவட்ட நிர்வாகம், கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஆகியோ ரால் வருவாய்த்துறைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. இதனால், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து, தங்கள் வீடு திரும்பியுள்ள பலரை, தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர்கள், பேரா வூரணி அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள நபர்களை தனிமைப்படுத்த வேண்டி உள்ளதால், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு சளிப்பரிசோதனை செய்ய வேண்டும் என கிராம நிர்வாக அலு வலர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.  அதே நேரத்தில், பேராவூ ரணி, சேதுபாவாசத்திரம் வட்டா ரத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு, சளிப்பரி சோதனை செய்த பின்னரே, பிரச வத்திற்காக அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதனால் தினசரி 30 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள், சளிப்பரி சோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனையில் கூடுகின்றனர். மேலும், அவர்களுடன் துணைக்கு வரும் உறவினர்களாலும், சமூக இடைவெளியைப் கடைப்பிடிக்க முடியாமல், கூட்டமாக நிற்கும் நிலை ஏற்படுகிறது.  இந்நிலையில், புதன்கிழமை அன்று வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை அழைத்துக் கொண்டு, கிராம நிர்வாக அலு வலர்கள், பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ள னர். ஆனால் பணியில் இருந்த மருத்துவர், தங்களுக்கு கர்ப்பிணிக ளுக்கு முன்னுரிமை கொடுத்தே சளிப்பரிசோதனை செய்ய வேண்டும் என மேலதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். போதிய அளவு கருவிகள் இல்லை. நாளை வாருங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.  இதனால் நான்கு தினங்களாக பரிசோதனைக்கு வந்து, பரிசோ தனைக் கருவிகள் இல்லை எனத் திருப்பி அனுப்பப் படுவதால் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தோர் ஆவேசமடைந்து, இனி பரிசோத னைக்கு அழைக்காதீர்கள் என கிராம நிர்வாக அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் இறங்கிய தால், பேராவூரணி அரசு மருத்துவ மனையில் பரபரப்பு ஏற்பட்டது.  

மேலும் நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளி இன்றி திரண்டனர். இதனால் கொரோனா தொற்று கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, போதிய அளவு சளிப் பரிசோதனை கருவிகளை அரசு மருத்துவமனைக்கு விநியோகிக்க வேண்டும். கர்ப்பிணிகளை பேரா வூரணி வருமாறு அலைக்கழிக்கா மல், அந்தந்தப் பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சளிப்பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி வலியுறுத்தி உள்ளார்.