தீண்டாமை ஒழிப்பு முன்னணி அஞ்சலி
சென்னை, டிச. 7 - அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறு வனத் தலைவரும், சென்னை மாநகர முன் னாள் மேயருமான வை.பாலசுந்தரம் வெள்ளி யன்று (டிச.6) காலமானார். அவருக்கு வயது 76. சென்னையின் ஐம்பெரும் ஆளுமை கள் என்று அறியப்படுகிற ஐயா இளைய பெருமாள், சொல்லின் செல்வர் சக்திதாசன், பெரியவர் சுந்தரராசனார், டாக்டர் சேப்பன் இவர்களோடு ஒரு இணைப் போராளியாகச் செயலாற்றியவர். 1969 ஆம் ஆண்டு சென்னை மாநகரத் தந்தையாகவும், 1971-ல் அச்சிறுப் பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வும் செயல்பட்டவர்.
தமிழகத்தின் மூத்த தலித் உரிமை களுக்கான செயல்பாட்டாளரான பாவலர் வை.பாலசுந்தரத்தின் உடல் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக் கப்பட்டிருந்தது. அன்னாரது உடலுக்குத் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலா ளர் கே.சுவாமிநாதன், தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் பா.சுந்தரம், பொருளாளர் எஸ்.சந்தானம், தமு எகச மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் உள்ளிட்டோர் மலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பாவலர் வை.பாலசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துத் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில், மனித உரிமை மற்றும் தலித் உரிமை களுக்கான பல சட்டங்கள் உள்ள நிலையில் கூட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக் காக போராடுவது கடினமாக உள்ளது. ஆனால், 1960-70 காலகட்டங்களில் மனித உரி மைக்காகவும், தலித் உரிமைக்காகவும் போராடியவர் பாலசுந்தரம் என்று புகழாரம் சூட்டியுள்ளது.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல். திருமாவளவன் எம்பி, வெளி யிட்டிருக்கும் இரங்கல் அறிக்கையில், “அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் வை.பாலசுந்தரம் காலமானார் என்கிற தகவல றிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்பதற்காக நான் தற்போது ஜெர்மனிக்கு வந்துள்ள நிலையில், அவருடைய திருவுட லுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இயலாத நிலையிலிருப்பது மேலும் வேதனை யளிக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை களையேற்று கடந்த ஐம்பது ஆண்டு களுக்கும் மேலாக தலித்துகள், பழங்குடியி னர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வந்த திரு.வை.பா மறைவு, அனைத்துத் தரப்பு விளிம்புநிலை மக்களுக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.