தஞ்சாவூர்,மார்ச் 18 – கொரோனா வைரஸ் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்கள் மூடப் பட்டன. ஆனால் தினமும் வழக்கம் போல் நான்கு கால பூஜைகள் நடை பெறும் என கோவில் நிர்வாகம் அறி வித்துள்ளது. உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் தமிழகத்தின் முக்கிய மான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. தினமும் வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சென்ற வண்ணம் இருப்பர். கடந்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கு பிறகு, பக்தர்களும், சுற்றுலா பயணி களும் பெரியகோவிலுக்கு வருவது அதி கரித்தது. கொரோனா வைரஸ் அச்சம் காரண மாக, பல்வேறு சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிய நிலையிலும், பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்று லாப் பயணிகளின் எண்ணிக்கை குறைய வில்லை. இதையடுத்து கோவிலில், மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய தொல்லி யல் துறையின் கீழ் உள்ள சுற்றுலாத் தலங்களை வரும் மார்ச்.31 ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை காலை 11 மணிக்கு கோவி லில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப் பட்டனர். மராட்டா கோபுரத்தின் நுழைவு வாயி லில் அறிவிப்பு விளம்பரம் வைக்கப் பட்டு கோவில் மூடப்பட்டது. கோவி லுக்கு வந்தவர்கள் திரும்பி அனுப்பப் பட்டனர். மேலும் கோவிலில் ஆகம விதிப்படி நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என அறநிலைய மற்றும் தொல்லியல் துறை யினர் அறிவித்தனர். இதே போல் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள இந்திய தொல்லி யல் துறையின் கட்டுப்பாட்டில் செயல் படும் ஐராவதீஸ்வரர் கோவிலும் புதன்கிழமை முதல் மூடப்பட்டது.