தஞ்சாவூர், மார்ச் 15- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், ஆவணம் கிளை சார்பில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டத்திற்கு எதி ரான தொடர் போராட்டத்தின், ஒரு பகுதி யாக ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். இதில் 47 பேர் இரத்தக் கொடை வழங்கி னர். இந்த முகாமிற்கு மாவட்ட மருத்துவ ரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அதிரை ராஜிக், பாவா, ஆவணம் ரியாஸ், யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவணம் குல்சார், புரோஸ், ரியாஸ், அப் சல், இனாமுல், ஆவாத் கலந்து கொண்ட னர்.