தஞ்சாவூர், ஆக.3- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு, வாலிபர் சங்க கிளை மா நாடு தனிமனித இடைவெளியுடன் ஒன்றியக்குழு உறுப்பினர் ந.தீப ன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளைத் தலைவராக பா.சிலம்பரசன், செயலாளராக செ.சிவகுமார், பொருளாளராக ஆ.ராஜா, துணைத்தலைவராக இ.சுவேதன், துணைச் செயலாளராக ப.குழந்தைவேல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா வாழ்த்திப் பேசினார். வாலிபர் சங்க தியாகிகளின், “விதை யாய் விழுந்தவர்கள்” புத்தகத்தை புதிய நிர்வாகிகளுக்கு வழங்கினார். மாநாட்டில் “ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காட்டில் 35.50 ஏக்கர் பர ப்பளவு கொண்ட குரும்பைக்குள ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளை, வருவாய்த்துறை நிர்வாகம் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நில அளவை செய்து கொடுத்து, பொது ப்பணித்துறை நிர்வாகம் ஆக்கிரமிப்பு களை அகற்றி தர வேண்டும். ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் இளைஞர்களுக்கு வழங்கப்படும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் குடிக்காடு கேணி ப்பாலம் தெருவில் உள்ள இளை ஞர்களுக்கு வழங்க வேண்டும். ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு தெருவில் உள்ள எட்டுபுலிக்காடு மூன்றாம் நம்பர் வாய்க்காலில் அமை ந்துள்ள கேணிப்பாலத்தை மாற்றி, புதிய பாலம் கட்டித் தர வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.