tamilnadu

img

ஸ்பெயின் சாம்பியன்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் 

டென்னிஸ் உலகில் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு அடுத்து மிகப்பெரிய தொடராக கருதப்படும் டேவிஸ் கோப்பை தொடரின் இறுதி சுற்று ஆட்டங்கள் ஐரோப்பாவின் கிழக்குப் பகுதி நாடான ஸ்பெயினில் நடைபெற்றது.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த தொடரில் ரஷ்யா, கனடா, கிரேட் பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின. ரஷ்யா - கனடா அணி கள் மோதிய முதலாவது அரை யிறுதி ஆட்டத்தில் கனடா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறு திக்கு முன்னேறியது. அதே போல  கிரேட் பிரிட்டன்- ஸ்பெயின் அணிகள் மோதிய 2-வது அரையிறுதி ஆட்டத் தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற  கணக் கில் இங்கிலாந்தை புரட்டியெடுத்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

விடுமுறை நாளான ஞாயிறன்று (இந்திய நேரப்படி - திங்கள் அதி காலை)  நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்  ஸ்பெயின் - கனடா அணிகள் பலப் பரீட்சை நடத்தின. ஒற்றையர் பிரிவில் தோல்வியே சந்திக்காமல் 2-0 என்ற கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்ததால் இரட்டையர் பிரிவு போட்டி நடத்தாமல் ஸ்பெயின் அணிக்குக் கோப்பை வழங்கப்படுவ தாக டேவிஸ் நிர்வாகம் அறிவித்தது. இதன் மூலம் 8 வருடங்களுக்குப் பிறகு 6-வது முறையாக ஸ்பெயின் அணி கோப்பையைக் கைப்பற்றியது. வெற்றிபெற்ற ஸ்பெயின் அணிக்குக் கோப்பையுடன் 16 கோடி ரூபாயும் (இந்திய மதிப்பில்), கனடா அணிக்கு 11 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அது வேறு... இது வேறு...

இந்திய டென்னிஸ் அணி வரும் 29-ஆம் தேதி கஜகஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியும் டேவிஸ் கோப்பை பிரிவு தான் என்றாலும், இது ஆசியா மற்றும் ஓசியானியா பகுதிகளில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் தொடர் ஆகும். இதனை குரூப் 1 என அழைப்பார்கள். இதில் சாதித்தால் தான் மெயின் குரூப்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். ஓசியானியா பகுதி என்பது ஆஸ்திரேலிய கண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில தீவு பகுதிகள் ஆகும்.