புதுக்கோட்டை, ஜூலை.19- காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை அனுராதாவை ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப் பட்டியை சேர்ந்த பளுதூக்கம் வீராங் கனை அனுராதா. இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணி யாற்றி வருகிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன் வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் அனுராதா கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கும், நமது மாநிலத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பளுதூக்கும் போட்டியில் தனது பயிற்சியை ஆரம்பித்து உலகளவில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் சாதாரண பெண்களும் சாதனையாளர்கள் ஆகலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாக அனுராதா விளங்குகிறார் என ஆட்சியர் பாராட்டினார்.