tamilnadu

img

நிவாரணம்... இழப்பீடு... பாதுகாப்பு... கேட்டு

மதுரை, ஜூன் 20- மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சௌடார்பட்டியிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது எஸ்.வலையபட்டி. இங்கு வசிக்கும் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்தியினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறிய மதுரை மாவட் டக் காவல்துறையைக் கண்டித்தும், சாதி வெறித் தாக்குதல் நடத்திய குற்ற வாளிகளை எஸ்.சி., எஸ்.டி., சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களுக்கு  உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் மதுரையில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன்,  மாநகர் மாவட்டச் செய லாளர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் மா.கணேசன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி மக்கள் விடுதலைக் கட்சி நிறு வனர் சு.க.முருகவேல்ராஜன், சிபிஎம் மூத்த தலைவர் என்.நன்மாறன், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச் செயலா ளர் த.செல்லக்கண்ணு, மதுரை மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிர மணியன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் பா.காளிதாஸ். திராவிடர் கழக வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் நா.கணேசன், தமிழ்தேச மக்கள் முன்னணி சார்பில் மீ.த.பாண்டியன், எஸ்டிபிஐ மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா.பிலாலுதீன், விடு தலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் இன்குலாப், தமிழ்ப்புலி கள் அமைப்பின் தலைவர் நாகை. திருவள்ளுவன், வழக்கறிஞர் ரஜினி, தேவேந்திரர் சமூக பாதுகாப்புக் கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறி யாளர் எம். ஊர்காவலன், ஆதித் தமிழர் பேரவை நிர்வாகி இரா.செல்வம், ஆதித் தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன், வன வேங்கைகள் கட்சித் தலைவர் தொ.மு.இரணியன் ஆகியோர் பேசினர்.