tamilnadu

img

ஒரே நாடு, ஒரே சட்டம், புதிய அரசியலமைப்பு - இலங்கை ஜனாதிபதி கோத்தபய அறிவிப்பு

கொழும்பு, ஆக.21- நாட்டில் தற்போது நடைமுறை யிலுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமை யாக ரத்து செய்து, அதற்கு பதி லாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல மைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற அடிப்படையில் இந்த அரசியலமைப்பு உருவாக்கப் படும் எனவும் ஜனாதிபதி அறி வித்துள்ளார். தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற மதங்களின் நிலை

பௌத்த மதத்திற்கு முன்னு ரிமை வழங்கப்பட்டுள்ள அதே வேளை, ஏனைய சமயங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஏனைய சமயத்தவர்கள் தமது சம யங்களை தடையின்றி பின்பற்றுவ தற்கு தடைகள் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மீனவர்கள்

சர்வதேச நாடுகளில் இருந்து இலங்கை எல்லைக்குள் பிரவே சித்து, சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபடும் நடவடிக்கை முழுமையாக இல்லாது செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வினால் கொண்டு வரப்பட்ட அரசிய லமைப்பில் இதுவரை 19 திருத்தங் கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டு, 20ஆவது திருத்தத் தை கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது குறிப்பி டத்தக்கது.