tamilnadu

img

செவ்வாய்க்கிழமை அன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் வாசகர் வட்டப் பேரவை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை எம்.என்.வி திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் வாசகர் வட்டப் பேரவை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் என்.சிவகுரு, எம்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்செல்வி, மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் பேசினர்."அரசியல் சட்டங்களும் ஜனநாயகமும்" என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் சிறப்புரையாற்றினார்.