tamilnadu

துரத்துகிறது கந்துவட்டி

பெரம்பலூர், ஜூன் 3-பெரம்பலூர் அருகே கந்துவட்டிக் கொடுமையிலிருந்து காப்பாற்றக் கோரி மாவட்ட ஆட்சியர் வே.சாந்தாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(38), ஆட்சியரிடம் அளித்த மனுவில், 2 மகள்களுடன் கூலி வேலை செய்து வசித்து வருகிறேன். எனதுகுடும்ப செலவுக்காக அதே கிராமத்தைச் சேர்ந்த வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவரிடம் கடந்த 16.5.14-ல் ரூ.1.50 லட்சம் வட்டிக்கு பணம்வாங்கியதற்கு மாதம் தோறும் வட்டிப் பணம் செலுத்தி வந்தேன். கடந்த 15.3.2018-ல் ரூ.1 லட்சத்தை திரும்ப செலுத்தி விட்டேன். இந்நிலையில் எனது வீட்டை, அவர் விலைக்கு கேட்டதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். இதை கருத்தில் கொண்டஅவர், தனது அடியாள்கள் மூலமாக எனதுகுடும்பத்தை மிரட்டி வருகிறார். இதுகுறித்து, 26.11.2018-ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், அரும்பாவூர் காவலர்கள் விசாரண மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி எனது மனைவியை கடத்திச் சென்று, அவரை மிரட்டி ரூ.4.50லட்சம் வழங்க வேண்டுமெனவும் துன்புறுத்தி வருகிறார். எனவே இதுகுறித்து ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.