tamilnadu

img

தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவித்தது. பள்ளிகள் திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. சில மாநிலங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திகில், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆகிய வகுப்புகளில் பயிலக்கூடிய மாணவ மாணவியர்கள் தங்கள் விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம். இதனை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மாணவர்கள் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும். ஆசிரியர்களை தனித்தனியாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வரச்செய்ய வேண்டும். ஆசிரியர் குழுக்கள் இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு செல்லாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.