tamilnadu

img

கோட்டக்குந்நில் தாய் மகள் சடலம் மீட்பு

மலப்புறம், ஆக.11- மலப்புறம் மாவட்டம் கோட்டக்குந்நில் வீடுகளின் மேல் நிலச்சரிவால் ஏற்பட்ட மண் குவியலில் இருந்து சாத்தங்குளம் சரத்தின் மனைவி கீது (22) ஒன்றரை வயது மகள் துருவ் ஆகியோரது சடலங்கள் ஞாயிறன்று மீட்கப்பட்டன.  இதுபோல் கவளப்பாறையில் ஜோஜியின் மகள் அலீனா (7) மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிமிண்ட் தூணுக்கு அடியிலிருந்து இந்த சடலங்களை மீட்க மீட்பு படையினர் மிகுந்த சிரமப்பட்டனர். கவளப்பாறையில் இருந்து 11 சடலங்களை மீட்டனர். மேலும் 50 பேர் வரை மண்மூடி காணப்படும் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதாக கருதப்படுகிறது.