tamilnadu

img

காஷ்மீருக்குள் நுழைய குலாம் நபி ஆசாத்துக்கு தடை

ஸ்ரீநகர், ஆக. 8- காஷ்மீரின் உரிமைகளைப் பறித்து, அம்மாநிலத்தைச்சிதைத்துள்ள மோடி அரசின் சட்டதிருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் மூத்த தலைவரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான காஷ்மீரை சேர்ந்தவரு மான குலாம் நபி ஆசாத் பலத்த எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் பேசினார். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், குலாம் நபி ஆசாத் மற்றும்  ஜம்மு - காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர் ஆகியோர் வியாழனன்று காஷ்மீர் வந்தனர். அவர்களை போலீசார்  ஸ்ரீநகர் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தி வைத்தனர். குலாம் நபி ஆசாத் தடுத்து நிறுத்தப் பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள  மத்திய அரசு  குலாம்நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளார் என கூறி உள்ளது.