tamilnadu

img

கோவிட்-19: சென்னையில் 6 மண்டலங்களில் வேகமாக உயரும் பாதிப்பு

சென்னையில் 6 மண்டலங்களில் கோவிட்-19 தொற்று வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 874 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 618 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. 9,909 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் 13,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 109 பேர் உயிரிழந்துள்ளனர்; 6,869 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,446 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 28 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 13 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 14 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,437 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 21 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 14 பேர் உயிரிழந்துள்ளனர்.