திண்டுக்கல், மார்ச் 9- திண்டுக்கல் ஆட்சியரகத்தில் விவசாயி ஒருவர் விஷ மருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தார். நிலக்கோட்டை அருகே உள்ளது பிள்ளையார் நத்தம். இங்கு வசிப்பவர் ராஜேந்திரன். இவரது 95 சென்ட் விவசாய நிலத்தை ஆண்டியப்பன், போஸ், செல்வம் ஆகிய மூன்று பேர் போலியாக ஆவணம் தயாரித்து பட்டா பெற்று நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக ராஜேந்திரன் நிலக்கோட்டை காவல்நிலையத்தில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து திங்களன்று திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுக் கொடுக்க வந்த ராஜேந்திரன் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த காவல்துறையினர் ராஜேந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.