சேலம், ஜூலை 29- சேலம் குளூனி பள்ளிக்கு செல்லும் சுப்ரமணியபுரம் எக்ஸ்டன்சன் சாலையின் பெயர் கூகுள் மேப்பில் திடீரென வீர சாவர்க்கர்் ரோடு என பதிவிடப்பட்டுள் ளதை நீக்கிட தமிழக அரசும், சேலம் மாந கராட்சியும் உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சேலம் ராம கிருஷ்ணா ரோட்டில் இருந்து குளூனி பள்ளிக்கு செல்லும் சாலை நீண்ட கால மாக சுப்பிரமணியபுரம் எக்ஸ்டன்சன் சாலை என்ற பெயரில் உள்ளது. சேலம் மாநகராட்சியும் மேற்கண்ட பெயரில் பல கையையும் வைத்துள்ளது. இந்நிலையில், திடீரென்று தற்போது கூகுள் மேப்பில் அந்த சாலை வீரசாவர்க்கர் சாலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அனைவரை யும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இத் தகைய நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சேலம் மாவட்டகுழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது. மேலும் தமிழக அரசும், சேலம் மாநக ராட்சியும் கூகுளில் வீரசாவர்க்கர் ரோடு என்று உள்ளதை உடனடியாக நீக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய மோசடி வேலையை செய்த நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.