ஏற்காடு, ஜூலை 4- ஏற்காட்டில் மருந்தாளுனருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டதை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் புதனன்று 47 நபர்க ளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனை முடிவு கள் வியாழனன்று கிடைக்கப்பெற்றன. இம்முடிவில் ஏற் காடு தாலுக்காவிற்குட்பட்ட வாழவந்தி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் பணியாற்றும் 57 வயதுடைய மருந்தாளு னருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.
இவர் சேலம் அம்மாப்பேட்டைக்கு தினசரி பணிக்கு வந்து சென்றுள்ளார். இதனையடுத்து, அவரை அம்மாப்பேட்டை சுகாதாரத் துறையினர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இதனையடுத்து வாழவந்தி ஆரம்ப சுகா தார நிலையம் மூடப்பட்டது. மேலும் அங்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிகளின் வீடுகளுக்கே சென்று கொரோனா சோத னைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக வட்டார மருத்தவ அலுவலர் தாம்சன் தெரிவித்தார்.